குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
நாகர்கோவில் தமிழ் பொண்ணு பத்மப்ரியா. மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்து 'தவமாய் தவமிருந்து' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். பட்டியல், சத்தம்போடாதே, மிருகம், பொக்கிஷம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், தங்க மீன்கள் படத்தில் நடித்தார்.
பத்மப்ரியா நடித்துக் கொண்டே அமெரிக்க பல்கலைகழம் ஒன்றில் எம்பிஏ படித்தார். அப்போது உடன் படித்த குஜராத்தைச் சேர்ந்த ஜாஸ்மினை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எம்பிஏ படிப்பின் இறுதியாண்டு அமெரிக்காவில் தங்கி படிக்க வேண்டும் என்பதால் இருவரும் படிப்புக்காக அமெரிக்கா சென்று விட்டனர். இதனால் கடந்த ஒரு ஆண்டாக பத்மப்ரியா எந்த படத்திலும் நடிக்வில்லை. அவர் சினிமாவை விட்டு விலகி விட்டார் என்றும் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார் என்றும் செய்திகள் வெளியானது.
தற்போது பத்மப்ரியா படிப்பை முடித்த விட்டு இந்தியா திரும்பிவிட்டார். தனது வருங்கால சினிமா குறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் சினிமாவிலிருந்து விலகி விட்டதாக பலர் தவறான தகவல்களை பரப்பி இருக்கிறார்கள். இது வேதனையாக இருக்கிறது. சினிமாவை மறக்கவோ, விட்டு விலகவோ என்னால் முடியாது. படிக்கிற காலத்திலும் இயோபின்ட புத்தகம் என்ற மலையாளப்படத்தில் நடிக்கத்தான் செய்தேன். கடந்த ஒரு வருடமாக நடிக்க வில்லை என்பது உண்மைதான். இப்போது படிப்பு முடிந்து வந்துவிட்டேன். தமிழ் மற்றும் மலையாளத்தில் கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில் நான் நடிக்கும் படம் பற்றிய முறையான அறிவிப்பு வரும். என்கிறார் பத்மப்பிரியா.