‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

25 வருடங்களுக்கு முன் டி.கே.ராஜீவ்குமார் இயக்கத்தில் 'சாணக்யன்' என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார் கமல்ஹாசன்! மிமிக்ரியை மையமாக வைத்து த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டிருந்த இப்படம் கேரளத்தில் பெரிய வெற்றியை பெற்றது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற பெருநகரங்களிலும் 100 நாட்கள் ஓடியது. சாணக்யன் படத்தை தொடர்ந்து 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கமல்ஹாசனும், இயக்குநர் டி.கே.ராஜீவ்குமாரும் ஒரு படத்தில் இணைகின்றனர். இப்படம் ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக உருவாக இருக்கிறதாம். இப்படத்திற்கு தமிழில் 'அப்பா அம்மா விளையாட்டு' என்றும் தெலுங்கில் 'அம்மா நானா ஆட்டா' என்றும் டைட்டில் வைத்திருக்கின்றனர்.
ஹிந்தி பதிப்பிற்கான பெயர் இன்னும் முடிவாகவில்லை. 'பேசும்படம்', 'சத்யா' படங்களில் கமல்ஹாசனுடன் நடித்த அமலா அக்கினேனி இந்தப்படத்தில் கதாநாயகயாக நடிக்கிறார். வயதான கமலுக்கு ஜோடியாக, பாலிவுட் நடிகை செரீனா வாஹப் நடிக்க இருக்கிறார்! இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் உருவாக இருப்பதாக முதலில் கூறப்பட்டது. இப்போது என்ன காரணத்தினாலோ மலையாளம் வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் எடுக்க திட்டமிட்டுள்ளார்கள்! இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்விருக்கிறது. 'தூங்காவனம்' படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்க உள்ள படம் இதுதான். இந்தப் படத்தை முடித்த பிறகே லிங்குசாமியின் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார் கமல்.