கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

25 வருடங்களுக்கு முன் டி.கே.ராஜீவ்குமார் இயக்கத்தில் 'சாணக்யன்' என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார் கமல்ஹாசன்! மிமிக்ரியை மையமாக வைத்து த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டிருந்த இப்படம் கேரளத்தில் பெரிய வெற்றியை பெற்றது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற பெருநகரங்களிலும் 100 நாட்கள் ஓடியது. சாணக்யன் படத்தை தொடர்ந்து 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கமல்ஹாசனும், இயக்குநர் டி.கே.ராஜீவ்குமாரும் ஒரு படத்தில் இணைகின்றனர். இப்படம் ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக உருவாக இருக்கிறதாம். இப்படத்திற்கு தமிழில் 'அப்பா அம்மா விளையாட்டு' என்றும் தெலுங்கில் 'அம்மா நானா ஆட்டா' என்றும் டைட்டில் வைத்திருக்கின்றனர்.
ஹிந்தி பதிப்பிற்கான பெயர் இன்னும் முடிவாகவில்லை. 'பேசும்படம்', 'சத்யா' படங்களில் கமல்ஹாசனுடன் நடித்த அமலா அக்கினேனி இந்தப்படத்தில் கதாநாயகயாக நடிக்கிறார். வயதான கமலுக்கு ஜோடியாக, பாலிவுட் நடிகை செரீனா வாஹப் நடிக்க இருக்கிறார்! இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் உருவாக இருப்பதாக முதலில் கூறப்பட்டது. இப்போது என்ன காரணத்தினாலோ மலையாளம் வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் எடுக்க திட்டமிட்டுள்ளார்கள்! இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்விருக்கிறது. 'தூங்காவனம்' படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்க உள்ள படம் இதுதான். இந்தப் படத்தை முடித்த பிறகே லிங்குசாமியின் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார் கமல்.