குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் விஷால் அணியினர் வெற்றி பெற்று நிர்வாகத்தை பிடித்தனர். நடிகர் சங்கம் தொடர்பான ஆவணங்கள், ஒப்பந்த நகல்கள், உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள், சங்க வரவுசெலவு பற்றிய விபரங்கள் அனைத்தும் சரத்குமார் வசம் இருந்தது. இதனை எப்படி வாங்குவது என்ற தயக்கத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் வேல்ஸ் பல்கலைகழகத்தின் இணை வேந்தரும், நடிகர் ஐசரி வேலன் மகனுமான ஐசரி கணேஷ் நடிகர் சங்க புதிய நிர்வாகிகளையும், சரத்குமாரையும் ஒரு நட்சத்திர ஓட்டலில் சந்திக்க வைத்தார். கதகளி படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் செயலாளர் விஷாலும், துணை தலைவர் கருணாசும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. மற்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, சரத்குமார் நடிகர் சங்கம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் புதிய தலைவர் நாசரிடம் ஒப்படைத்தார். நாசரும் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தார். சங்கம் தொடர்பான எந்த சந்தேகமாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் என்னிடம் கேட்கலாம் என்றும் மீடியாக்கள் மூலம் கேட்க வேண்டாம் என்றும், குறிப்பாக பூச்சி முருகன், எஸ்.வி.சேகர் போன்றவர்கள் மீடியாக்கள் மூலம் விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் சரத்குமார் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு புதிய நிர்வாகம் ஒப்புக் கொண்டதாவும் கூறப்படுகிறது.