100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்து சில நாட்களுக்கு முன் வெளிவந்த 'நானும் ரௌடிதான்' படம் பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்துவிட்டது. கடந்த நான்கு நாட்களிலேயே இந்தப் படத்தின் வசூல் 10 கோடி ரூபாயைக் கடந்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் வெற்றி தனுஷையும், விஜய் சேதுபதியையும் மீண்டும் இணைத்துவிட்டது. விரைவில் தனுஷ் தயாரிக்க உள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளாராம். இது பற்றி தனுஷே நேற்று அறிவித்துவிட்டார்.
“உன்டர்பார் பிலிம்ஸுக்காக 'நம்ம ரவுடி' விஜய் சேதுபதி மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பதை மிக மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்” என நேற்று தனுஷ் தெரிவித்துள்ளார். தனுஷ் தயாரிப்பில் இதற்கு முன் சிவகார்த்திகேயன் தொடர்ச்சியாக “எதிர் நீச்சல், காக்கி சட்டை'' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது சிவகார்த்திகேயனின் போட்டியாளராகக் கருதப்படும் விஜய் சேதுபதியை வைத்து தனுஷ் இரண்டாவது படத்தையும் தயாரிக்க உள்ளார். இந்தச் செய்தி திரையுலகத்தினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது நாள் வரை சிவகார்த்திகேயனை வைத்து இரண்டு படங்களைத் தயாரித்து அவரை தன்னுடன் நெருக்கமாக வைத்திருந்த தனுஷ் தற்போது விஜய் சேதுபதிக்கு அந்த இடத்தைக் கொடுத்து விட்டாரோ என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு தயாரிப்பாளராக தனுஷ் தன்னுடைய ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் எடுத்து வைத்து தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெறுகிறாரே என கோலிவுட்டே ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளது.