குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
ஒரு நடிகர் நடிக்க மறுத்த படத்தில் இன்னொரு நடிகர் நடிப்பதைப்போல், ஒரு இசையமைப்பாளர் இசையமைக்க மறுத்த படத்துக்கு இன்னொரு இசையமைப்பாளர் இசையமைப்பது ஒன்றம் தவறில்லை.
ப்ரியதர்சன் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன் முதலானோர் நடித்துள்ள 'சில சமயங்களில்'படத்திற்கு முதலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பார் என்று சொல்லப்பட்டது.
'காஞ்சிவரம்' படத்திற்கு பிறகு ப்ரியதர்சன், பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி மீண்டும் கூட்டணி அமைத்துள்ள இப்படத்தை பிரபு தேவாவின் 'பிரபுதேவா ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரிக்கிறது.
பிரபுதேவாவின் முதலீட்டில் லைன் புரட்யூசராக இருந்து இயக்குநர் ஏ.எல்.விஜய் மற்றும் நடிகை அமலாபாலின் 'திங்க் பிக் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்துக் கொடுக்கிறது.
எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதை அம்சம் கொண்ட இப்படத்துக்கு முதலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பார் என்று சொன்னார்கள்.
ஏ.எல்.விஜய், ப்ரியதர்ஷன் இருவரும் அவரை சந்தித்து கதையை சொன்னார்கள்.
ஏனோ அவர் இசையமைக்க மறுத்துவிட்டாராம்.
எனவே அடுத்த சாய்ஸாக, இளையராஜாவை அணுகி உள்ளனர்.
'சில சமயங்களில்' படத்தை இளையாராஜாவுக்கு போட்டுக் காண்பித்துள்ளார் ப்ரியதர்சன்.
படத்தை பார்த்ததும் நெகிழ்ந்து போன இளையராஜா படத்தை பாராட்டியதோடு, இசை அமைக்கவும் ஒப்புக் கொண்டுள்ளார்.