இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் எதிர்பார்த்ததை விட அனல் பறக்க நடந்து கொண்டிருக்கிறது. விஷால் தனது பலத்தை காட்ட நேற்று முன்தினம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ஆதரவாளர்களை திரட்டிக் காட்டினார். மண்டம் நிறைந்து வழியும் அளவுக்கு கூட்டம் கூடியது. தமிழ்நாடு முழுவதிலிமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடக நடிகர்கள் வந்திருந்தார்கள். 60 இளம் ஹீரோக்கள் மேடையில் தோன்றி தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள். கமலஹாசன் நாசரை தலைவர் பதவிக்க முன்மொழிந்து தனது ஆதரவை வெளிப்படையாக அறிவித்தார். சிவகுமார், சத்யராஜ், வடிவேலு, போன்ற முன்னணி கலைஞர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
இந்த எழுச்சி சரத்குமார் தலைமையிலான அணியை கலங்கடித்துவிட்டது. இதுபோன்ற ஒரு கூட்டத்தை கூட்டிக்காட்ட அவர்களும் முழுமூச்சுடன் பணியாற்றி வருகிறார்கள். சரத்குமார், ராதிகா, ராதாரவி, சிம்பு ஆகியோர் தங்களுக்கு நெருக்கமான நடிகர் நடிகைகளை சந்தித்து கண்டிப்பாக கூட்டத்துக்கு வந்து ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். ராதாரவி அனைத்து ஊர்களுக்கும் தனது ஆட்களை அனுப்பி நாடக நடிகர்கள் வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். விஷால் அணி கமலின் ஆதரவை பெற்று விட்டதால் சரத்குமார் அணி ரஜினி ஆதரவை பெற தீவிரமாக முயற்சித்து வருகிறது. அனல் பறக்கும் இந்த தேர்தல் பணிகளை தமிழ்நாட்டு மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.