சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பிரபல நடிகர் நடிகைகள் பாடும் பாடல்கள் எளிதில் ஹிட்டாகி வருவதால் தற்போது மார்க்கெட்டில் இருக்கும் டி.இமான், அனிருத், தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் நடிகர் நடிகைகளை பாட வைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களில் இசையமைப்பாளர் அனிருத் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், ஸ்ருதிஹாசன், ஆன்ட்ரியா என பலரை தனது இசையில் பாட வைத்திருக்கிறார்.
அந்த வரிசையில், தான் இசையமைத்த 3 மற்றும் மான்கராத்தே ஆகிய படங்களில் ஸ்ருதிஹாசனை பின்னணி பாடி வைத்திருக்கிறார் அனிருத். இதில், 3 படத்துக்காக ஸ்ருதி பாடிய கண்ணழகா காலழகா, மான்கராத்தேயில் பாடிய உன் விழிகளில் என்ற இரண்டு பாடல்களுமே அந்த படங்கள் வெளியான நேரத்தில் இளசுகளின் பேவரிட் சாங்காக முணுமுணுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், தற்போது அஜீத்தின் வேதாளம் படத்துக்காகவும் அனிருத் இசையில் ஒரு டூயட் பாடலை பாடுகிறார் ஸ்ருதிஹாசன். இந்த பாடலை ட்ராக் சிங்கர் பாடியதை வைத்தே படமாக்கி விட்டார்களாம். அதனால் அடுத்தபடியாக ஆடியோ ரிலீசுக்கு முன்பு ஸ்ருதியை பாட வைக்கிறாராம் அனிருத்.
மேலும், இந்த வேதாளம் படம் தவிர, விஜய்யுடன் நடித்துள்ள புலி படத்திலும் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ஏன்டி ஏன்டி -என்று தொடங்கும் வைரமுத்துவின் பாடலை விஜய்யுடன் இணைந்து ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.