குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று பந்த் நடந்து வரும் நிலையில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் திரையுலக பிரமுகர்கள் சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். பிலிம்சேம்பரில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் டைரக்டர்கள் பாலுமகேந்திரா, பாரதிராஜா, அமீர், ஏ.ஆர்.முருகதாஸ், சரவண சுப்பையா, சேரன், மணிவண்ணன், வெற்றி மாறன், ஹரி, பிரவீன்காந்த், சுசிகணேசன், சசி, சமுத்திரகணி நடிகர்கள் சத்யராஜ், கஞ்சா கருப்பு மற்றும் தாமரை, ரோகினி உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர். டைரக்டர் சீமான் உண்ணாவிரதத்தில் சிறிது நேரம் பங்கேற்று விட்டு சென்று விட்டார். மேலும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். பொதுமக்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளனர். காலை 9 மணியளவில் தொடங்கிய இந்த உண்ணாவிரதம் மாலை 6 மணி வரை நடக்கிறது. அதன் பிறகு இலங்கை விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுத்து அறிவிக்கப்படும் என்று பிலிம்சேம்பர் தகவல்கள் தெரிவிக்கின்றன.