100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
விநாயகர் சதுர்த்தி தினமான இன்று ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளிவரும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. அனைத்துப் படங்களிலும் 'ரஜினி முருகன்' மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், சில பல காரணங்களால் அந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போனதால் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' களத்தில் குதித்தது. மேலும் சில படங்கள் புதிதாக களத்தில் குதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேர அவசரத்தால் அவை வர முடியாமல் போய்விட்டது.
கடைசியாக இன்று '49 ஓ, மாயா, த்ரிஷா இல்லனா நயன்தாரா' ஆகிய படங்கள் வெளியாகின்றன. '49 ஓ' படம் நேற்றே பத்திரிகையாளர்களுக்குத் திரையிடப்பட்டது. கவுண்டமணி என்ற தைரியமான காமெடி ஹீரோவால் மட்டுமே இப்படிப்பட்ட ஒரு படத்தில் நடிக்க முடியும் என்ற கருத்தே பத்திரிகையாளர்களிடம் நேற்று நிலவியது. வயதானாலும் கவுண்டமணியின் 'கமெண்ட்டும், நக்கலும்' கொஞ்சமும் குறையவில்லை. தங்களை மிகப் பெரும் ஸ்டார்களாக எண்ணிக் கொள்ளும் வேறு எந்த ஹீரோவும் இப்படிப்பட்ட ஒரு கதையில் தைரியமாக நடிக்க மாட்டார்கள் என்பது மட்டும் உண்மை. படம் முழுவதும் கவுண்டமணி, கவுண்டமணி, கவுண்டமணி மட்டுமே...
'மாயா' படம் நயன்தாரா என்ற நம்பிக்கை நாயகியை மட்டுமே நம்பி வெளிவருகிறது. இந்தப் படத்தின் எந்த பிரமோஷனுக்கும் வராத நயன்தாரா இன்று காலை தொலைக்காட்சியில் மட்டும் படத்தின் பிரத்யேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படத்தைப் பற்றி மனம் திறந்து பாராட்டிப் பேசினார். நிகழ்ச்சியில் வந்த காட்சிகளைப் பார்க்கும் போது 'மாயா' இதுவரை வெளிவந்த பேய்ப் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பேய்ப் படமாக இருக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது.
'டார்லிங்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்து வரும் படம் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா'. அனைவருமே வரி விலக்கிற்காக 'யு' சான்றிதழ் பெற போராடிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் 'ஏ' சான்றிதழ் பற்றி கவலைப்படாமல் படத்தை வெளியிடுகிறார்கள். முற்றிலும் இளைஞர்களை மட்டுமே நம்பி இந்தப் படம் வெளிவருகிறது. டைட்டிலும், படத்தில் உள்ள இரண்டு ஹீரோயின்களும் அந்த இளம் ரசிகர்களை ஏமாற்ற மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.
இந்த மூன்று படங்களுமே சிறிய படங்கள்தான், முன்னணி ஹீரோக்கள், பெரிய பட்ஜெட் என இல்லாமல் வெளிவருகின்றன. இந்தப் படங்கள் ரசிகர்களின் நம்பிக்கையை ஏமாற்றாமல் இருந்தால் இது போன்று இன்னும் பல சிறிய படங்கள் வெளிவந்து வெற்றி பெற வாய்ப்புள்ளது.