வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு |
திரைப்படக்கல்லூரியில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடித்தவர் ஆர்.கே.செல்வமணி. விஜயகாந்த் நடித்த புலன்விசாரணை, கேப்டன் பிரபாகரன் போன்ற அதிரடி படங்களை இயக்கி பரபரப்பாக பேசப்பட்டவர். அந்த வகையில் முதல் படம் இயக்க 14 ஆயிரம் சம்பளம் வாங்கிய ஆர்.கே.செல்வமணி இரண்டாவது படத்தை இயக்க 25 லட்சம் சம்பளம் வெற்றார். அதன்பிறகு செம்பருத்தி, அதிரடிப்படை, மக்களாட்சி, அசுரன், அரசியல் என பல அதிரடி படங்களை இயக்கியவர் ராஜீவ் காந்தியின் கொலையை மையப்படுத்தி குற்றப்பத்திரிகை படத்தை இயக்கினார். ஆனால் அந்த படத்துக்கு அரசியல்ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டதை அடுத்து அவரது வேகம் குறைந்து போனது.
இருப்பினும் பின்னர் புலன்விசாரணை-2 படத்தை பிரசாந்தை வைத்து இயக்கினார். ஆனால் படம் எதிர்பார்த்தபடி போகவில்லை. இதற்கிடையே கடந்த இரண்டு வருடத்துக்கு முன்பு, கன்னி வெடி என்றொரு படத்தை புதுமுக நடிகர் ஆனந்தனை வைத்து இயக்கினார் ஆர்.கே.செல்வமணி. ஆனால், படம் எதிர்பார்த்தபடி வியாபாரமாகிவில்லை. அதனால் படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு வருடமாக வெளிவரமுடியாமல் உள்ளது.