சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இந்தியத் திரையுலகில் ராஜமௌலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் எழுதிய இரண்டு கதைகளான 'பாகுபலி, பஜ்ரங்கி பைஜான்' ஆகிய படங்கள் மூலம் 1000 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் நிகழ்ந்துள்ளது. ஒரு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் கதைதான் என்பதை விஜயேந்திர பிரசாத் நிரூபித்துள்ளார். 'பஜ்ரங்கி பைஜான்' கதையை அவர் ரஜினிகாந்துக்கும் சொன்னதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு புதிய கதையை ரஜினியிடம் சொல்லியிருக்கிறாராம்.
சமீபத்தில் ஒரு விழாவில் ரஜினிகாந்தும், விஜயேந்திர பிரசாத்தும் சந்தித்துப் பேசியுள்ளார்கள். அப்போது விஜயேந்திர பிரசாத் அரசியல் பின்னணி கொண்ட ஒரு வித்தியாசமான கதையை ரஜினியிடம் சொல்லியிருக்கிறார். கதையை ஆர்வத்துடன் கேட்ட ரஜினிகாந்த், கதை நன்றாக இருப்பதாக சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் படத்தை விஜயேந்திர பிரசாத்தே இயக்க விரும்புவதாகவும் தெரிகிறது.
ரஜினி விரைவில் பா.ரஞ்சித் படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தையடுத்து ஷங்கர் இயக்க உள்ள 'எந்திரன் 2' படத்தில் நடிக்கப் போகிறார். இதற்கும் அடுத்து விஜயேந்திர பிரசாத் கதையில் ரஜினிகாந்த் 2016 கடைசியில் நடிக்கலாம் என்கிறார்கள்.