100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
ஜெயம்ரவி நடிக்கும் சகலகலா வல்லவன் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் குறிப்பிட்ட சில நிருபர்களுக்கு மட்டும் த்ரிஷாவும், அஞ்சலியும் பேட்டி தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது த்ரிஷாவின் பேட்டி முதலில் தொடங்கியது. சுமார் பத்துக்கும் மேற்பட்ட நிருபர்கள் த்ரிஷாவிடம் கேள்விகளைக் கேட்க, அவருக்கும் சளைக்காமல் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னார். சுமார் இருபது நிமிடங்கள் த்ரிஷாவின் பேட்டி நீடித்துக்கொண்டே போக, அருகில் அமர்ந்திருந்த அஞ்சலியின் முகம் வாடிப்போனது. தன்னை யாரும் கண்டு கொள்ளவே இல்லை என்று கடுப்பாகிவிட்டார் போலிருக்கிறது.
விருட்டென எழுந்து வெளியே போய்விட்டார். த்ரிஷாவின் பேட்டி முடிந்த பிறகு அஞ்சலியைத் தேடினால் ஆளைக் காணோம். த்ரிஷாவின் பேட்டி முடிந்ததும் தன்னை அழைப்பார்கள் என்பதை தெரிந்து கொண்ட அஞ்சலி, வேண்டும் என்றே செல்போனை காதில் வைத்துக் கொண்டு நகர்ந்துபோய்விட்டார். அவரை அழைக்கச் சென்ற படக்குழுவினரை கண்டும் காணாததுபோல் திரும்பி நின்று கொண்டார். கடைசியில் நிகழ்ச்சி தொடங்கும் நேரம் நெருங்கிவிடவே, நேராக மேடைக்கு சென்றுவிட்டார்.
யப்பா.. இந்த நடிகைகளுக்கு உள்ள பொறாமை இருக்கே...!