இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
சமீபகாலமாக ஒரு படத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகம் உருவாகுவதாக அதிகரித்து வருகிறது. முனி, காஞ்சனா, காஞ்சனா-2 என தொடர் படங்களை எடுத்தார் லாரன்ஸ். தற்போது வௌியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாகுபலி, இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதேப்போன்று கமலின் விஸ்வரூபம்-2 உருவாகி வருகிறது.
அந்த வரிசையில் நடிகர் தனுஷூக்கு வசூல் ரீதியாக மிகப்பெரிய பிரேக் கொடுத்த வேலையில்லா பட்டதாரி படமும் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் வேளையில், மாரி படமும் இரண்டாம் பாகமாக உருவாக இருப்பதாக தற்போது தகவல் வௌியாகியுள்ளது.
காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும் போன்ற படங்களை எடுத்த பாலாஜி மோகன், தனுஷ், காஜல் அகர்வாலை வைத்து இயக்கிய படம் மாரி. இப்படம் விமர்சனம் ரீதியாக சில குறைகளை சந்தித்தாலும் படம் பக்கா பொழுதுபோக்காக இருப்பதால் வசூலில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. இதுவரை தனுஷ் நடித்த படங்களின் ஓப்பனிங் வசூலை மாரி முறியடித்துள்ளது. அதிலும் தனுஷ் இந்தப்படத்தில் அடிக்கடி பேசும் செஞ்சுருவேன் டயலாக்கிற்கு ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், மாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. முதல்பாகத்தின் முடிவில் தனுஷ்-காஜல் உறவு வெறும் நட்பாகவே முடியும், இரண்டாம் பாகத்தில் அதை காதலுடன் சேர்த்து இன்னும் சில சுவாரஸ்யமான நிகழ்வுகளுடன் படத்தை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மாரி படத்தில் பணியாற்றிய அதே குழுவே, மாரி இரண்டாம் பாகத்திலும் பணியாற்ற இருக்கிறார்கள். விரைவில் மாரி-2 பற்றிய அறிவிப்பு வௌியாக இருக்கிறது.