இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? |
இந்திய அளவில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படமாக இதுவரை ஷங்கரின் எந்திரன் படம்தான் முதலிடம் வகித்து வந்தது. ஆனால் இப்போது அந்த படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்து பாகுபலி என்ற படத்தை இயக்கியிருக்கிறார் ராஜமவுலி. இந்த படத்தின் படப்பிடிப்பே இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்றிருக்கிறது.
சரித்திர பின்னணி கொண்ட கதை என்பதால், பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் சென்று படமாக்கியிருக்கும் ராஜமவுலி, அந்த காலகட்டத்தை கோடிக்கணக்கில் செட் போட்டு கண்முன் நிறுத்தியவர், சண்டை காட்சிகளுக்காக ஏராளமான குதிரை, யானைகளையும் பயன்படுத்தியிருக்கிறார்.
மேலும், தமிழ், தெலுங்கை முன்வைத்து படம் தயாரிக்கப்பட்டபோதும், தற்போது இந்தியாவில் அதிகமான மக்கள் பேசி வரும் பல மொழிகளிலும் இப்படம் டப் செய்து வெளியிடப்படுகிறதாம். வருகிற 10ந்தேதி திரைக்கு வரும் பாகுபலி படம் ஆந்திராவில் அதிகப்படியான தியேட்டர்களை கைப்பற்றியுள்ளது. அதனால், அதே தேதியில் வெளியாகயிருந்த மகேஷ்பாபு நடித்த தெலுங்கு படம் வேறு தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது.