100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
தன்னுடைய நண்பர் பெயரில் சிவகார்த்திகேயன் தொடங்கி உள்ள தயாரிப்பு நிறுவனத்துக்கு 24ஏஎம் ஸ்டுடியோஸ் என்று பெயர் வைத்துள்ளார். அட்லீயின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் படத்தை தன் பேனரில் முதல் தயாரிப்பாக தயாரிக்க உள்ளனர். இந்தப் படத்துக்கு முன்னணி தொழில்நுட்பக்கலைஞர்களை புக் பண்ணி இருப்பதன் மூலம் திரையுலகினரை வியக்க வைத்துள்ளனர். முன்னணி ஒளிப்பதிவாளரான பிசிஸ்ரீராம் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் நண்பரான அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். அனல் அரசு சண்டைப்பயிற்சியாளராகவும், ரூபன் எடிட்டராகவும், முத்துராஜ் கலை இயக்குநராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்கார் அவார்ட் வின்னரான ரசூல் பூக்குட்டி ஒலிக்கலவை செய்கிறார்.
இந்தப்படத்தில் இன்னொரு ஆஸ்கார் அவார்ட் வின்னரும் பணியாற்றுகிறார். லார்ட் ஆப் த ரிங்ஸ் உட்பட பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவரும் ஐ படத்தில் பணியாற்றியவருமான வீடா வொர்க்ஸ்ஷாப் சீன்ஃபூட் ஸ்பெஷல் மேக்கப்மேனாக பணியாற்றுகிறார். இவரை ஒப்பந்தம் செய்ததன் மூலம் இந்தப்படத்தில் உள்ள ரகசியம் வெளிப்பட்டிருக்கிறது. ஸ்பெஷல் மேக்கப் தேவைப்படும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வித்தியாசமான வேடம் போலிருக்கிறது.