பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! |
இந்தியத் திரையுலகில் இதுவரை படைக்காத வரலாற்றுச் சாதனையை படைக்க 'பாகுபலி' குழுவினர் மும்முரமாக திட்டமிட்டு வருகின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 4000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர். 'பாகுபலி' படத்தை மலையாளத்திலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். தமிழில் எடுக்கப்பட்டுள்ள 'பாகுபலி'தான் மலையாளம் பேச உள்ளது. நேற்று இந்தப் படத்தின் இசை வெளியீட்டை கொச்சியில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் வெளியிட்டார்கள். நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமெளலி , பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுவரை அல்லு அர்ஜுன் நடித்த தெலுங்குப் படங்களும்தான் டப்பிங் ஆகி அதிகமான வசூலைப் பெற்றுள்ளன. விஜய் நடித்த பல படங்கள் நேரடியாகவே தமிழில் வெளியாகியும் சாதனை புரிந்துள்ளன. 'ஐ' போன்ற படங்களும் நல்ல வசூலைக் குவித்துள்ளன. ஆனால், முதல் முறையாக அதிகமான திரையரங்குகள், மிகப் பெரிய வசூல் என கேரள மார்க்கெட்டில் சாதனை புரிய வேண்டும் என படத்தை வாங்கி வெளியிடும் குளோபல் யூனைடெட் நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறதாம். இதுவரை ஒரு டப்பிங் படத்திற்கு இந்த அளவிற்கு அந்தப் படத்தில் நடித்த நட்சத்திரங்கள் ஒரு இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதில்லை என்கிறார்கள்.
எப்படியோ மலையாள உலகில் ஒரு டப்பிங் படத்திற்கு இந்த அளவிற்கு மார்க்கெட்டிங் நடப்பதை மலையாளத் திரையுலகினரே ஆச்சரியத்துடன் பார்க்கிறார்களாம்.