குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
ரெயின் டிராப்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் அம்பத்தூரில் உள்ள ஆனந்தம் என்ற முதியோர் இல்லத்தில் அன்னையர் தினத்தைக் கொண்டாடியது. இந்த அமைப்பின் விளம்பர தூதரான இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரைஹானா தலைமையில் தாய்க்கு ஒரு தாலாட்டு என்ற இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவரை ரெய்ன் டிராப் அமைப்பும், ஆனந்தம் இல்லமும், சிறந்த தாலாட்டு பாடல்களை பாடியதற்காக சிறந்த அன்னை என்று பெருமைப்படுத்தி பி.சுசீலாவை பாராட்டி கவுரவித்தது.
பின்னர் இல்லத்தை சுற்றிப் பார்த்த பி.சுசீலா முதியவர்களுடன் மனம்விட்டு பேசினார். அவர்களில் பலரும் பி.சுசீலாவின் ரசிகைககளாக இருந்து சுசீலாவின் பாடல்கள் எப்படி தங்கள் வாழ்க்கையோடு இணைந்திருந்தது என்பதை விவரித்தனர். அதைக் கேட்டு சுசீலா நெகிழ்ந்து போனார்.