100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி நேற்று வெளியாகியுள்ள 'வை ராஜா வை' படம் '21' படத்தின் காப்பியாக இருக்கும் என்று பேசப்படுகிறது என சில தினங்களுக்கு முன்பு நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். படம் வெளிவந்த பின் அது உண்மைதான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், '21' படத்தை அப்படியே காப்பியடிக்காமல் கதைக் களத்திலும், கதாபாத்திரங்களிலும் சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள்.
ராபர்ட் லுகெடிக் இயக்கி 2008ம் ஆண்டு வெளிவந்த '21' படத்தில் படத்தின் நாயகன் ஒரு கல்லூரி மாணவனாக இருப்பார். அவரை அவருடைய கல்லூரி பேராசியரே சூதாட்டத்தில் ஈடுபடுத்துவார். 'வை ராஜா வை' படத்தில் நாயகன் கௌதம் கார்த்திக்கை ஒரு அலுவலகத்தில வேலை செய்பவராகவும், அவரை சூதாட்டத்தில் ஈடுபடுத்தும் விவேக்கை உடன் பணியாற்றுபவராகவும் மாற்றிக் காட்டியிருக்கிறார்கள். இந்த இரண்டு கதாபாத்திரங்கள்தான் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளது உள்ளபடி அப்படியே அப்பட்டமாக காப்பியடித்தால் ஏதாவது பிரச்சனைகளை சந்திக்க நேரலாம் என சில மாற்றங்களை செய்துள்ளார்கள். தமிழ் சினிமால் இதற்கு முன்னும் பல காப்பி படங்கள் வெளிவந்துள்ளது. இதற்கு முன்னும் வெளிவந்த 'தெய்வத் திருமகள்' உள்ளிட்ட படங்கள் ஹாலிவுட் படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ஹாலிவுட் நிறுவனங்களுக்கு தெரிந்து அவர்கள் கடும் நடிவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள். 'தெய்வத் திருமகள்' படத்திற்குக் கூட சுமார் 3 கோடி வரை ஹாலிவுட் நிறுவனத்திற்கு செலுத்தினார்கள் என்ற தகவல் கோலிவுட்டில் இருக்கிறது.
இப்போது 'வை ராஜா வை' படத்தை '21' படத்திலிருந்து காப்பியடித்திருப்பதால் '21' படத்தைத் தயாரித்துள்ள ஹாலிவுட் நிறுவனமும் ஏதாவது சட்ட நடவடிக்கையில் இறங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்த் திரைப்படங்கள் உலகம் முழுவதும் வெளியாகும் இன்றைய காலகட்டங்களில் இப்படி காப்பியடித்து படங்களை இயக்கும் போது அது சம்பந்தப்பட்டவர்களுக்கும் எளிதில் தெரிந்து விடுகிறது. இந்த காப்பியடிக்கும் கலாச்சாரம் இனியாவது நிற்குமா என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.