விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
தென்னிந்திய திரை உலகில் வளர்ந்து வரும் நடிகையான நித்யா மேனனின் நடிப்பில் ஒரே நேரத்தில் வெளிவந்த ஒ காதல் கண்மணி, காஞ்சனா 2 ஆகிய படங்கள் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி நடை போட்டு வருகின்றன. அந்த வகையில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்துள்ள ஓகே கண்மணி படம் இளைஞர்களால் கொண்டாடப்பட்டலும், திருமணத்திற்கு முன்னர் சேர்ந்து வாழும் கதை களத்தில் படம் நகர்வதால் சில எதிர்ப்புகளையும் இப்படம் சந்தித்து வருகின்றது.
இந்நிலையில் படத்தின் நாயகி நித்யா மேனன் இது குறித்து கூறுகையில், திருமணத்திற்கு முன்னர் சேர்ந்து வாழ்வது என்பது அவ்வாறு வாழும் தம்பதியர் சம்மந்தப்பட்ட தனிப்பட்ட விஷயம் அதில் யாரும் கேள்வி கேட்க முடியாது என்று தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வரவேற்பைப் பெற்றுள்ள ஓகே கண்மணி படத்தில் நடிகை நித்யா மேனன் நாயகன் துல்கர் சல்மானுடன் முத்தக் காட்சியிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.