இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்ஸி, முதல் படத்தில் கிடைத்த வெற்றியை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதன் பிறகு 2013-ல் வெளிவந்த அஜித்தின் ஆரம்பம் படத்தில் நடித்தார். அப்படத்துக்குப் பிறகு டாப்ஸி நடித்த வேறெந்த தமிழ்ப்படமும் ரிலீஸாகவில்லை. இரண்டு நடிகர்களின் காதல் போட்டியில் சிக்கியதால் டாப்ஸியின் பெயர் கெட்டது. இந்தப்பிரச்சனை காரணமாக சென்னையில் வசிப்பது பாதுகாப்பில்லை என்று எண்ணி ஐதராபாத்திலேயே செட்டிலாகிவிட்டார். அதனால் தமிழ்ப்படங்களை தவிர்த்து வந்தார்.
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக காஞ்சனா 2, மற்றும் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக வை ராஜா ஆகிய இரண்டு படங்களில் மட்டும் நடித்து வந்தார் டாப்ஸி. டாப்ஸி நடித்திருக்கும் இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளிவரவிருக்கிறது. இந்நிலையில், திரு இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் டாப்ஸி.
விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன் படத்திற்குப் பிறகு இயக்குனர் திரு, ஜெய்யை கதாநாயகனாக வைத்து புதிய படமொன்றை இயக்குகிறார். இப்படத்தில் முதலில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க இருந்தார். த்ரிஷா வேண்டாம் என்று ஜெய் சொன்னதோடு டாப்ஸியையும் சிபாரிசு செய்திருக்கிறார் ஜெய். அதன் காரணமாகவே டாப்ஸிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் கும்பகோணத்தைச் சேர்ந்த பெண்ணாக நடிக்கிறார் டாப்ஸி. டாப்ஸி நடிக்கவிருக்கும் காட்சிகள் இந்த மாத இறுதியில் கும்பகோணத்தில் படமாக்கப்படவிருக்கின்றன.