சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
உலக நாயகன் நடிகர் கமலஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் தெலுங்கு மற்றும் தமிழில் நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகர் கார்த்தி நடிக்கும் படத்திலிருந்து விலகியதால், அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'பிக்சர் ஹவுஸ் மீடியா' நீதிமன்றம் சென்றதாகவும், ஸ்ருதிஹாசன் மறு உத்தரவு வரும்வரை எந்த புதிய படங்களிலும் ஒப்பந்தம் செய்யப்பட கூடாது என நீதிமன்றம் உத்தரவு இட்டதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன.
ஆனால் இந்த தகவலை ஸ்ருதிஹாசன் தரப்பு மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் இருந்து நடிகை ஸ்ருதிஹாசன் விலகியதால் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர முயற்சிகள் செய்து கொண்டிருப்பதாகவும், ஆனால் இதுவரை எவ்வித வழக்கும் நீதிமன்றத்தில் பதிவாகவில்லை என்றும் நடிகை ஸ்ருதிஹாசன் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய தெலுங்கு நடிகர் சங்க தலைவருமான நடிகர் முரளிமோகன் நடிகை ஸ்ருதிஹாசன் கேட்டுக் கொண்டதால் இப்பிரச்சனையை சுமூகமாக முடிக்க 'பிக்சர் ஹவுஸ் மீடியா' நிறுவனத்துடன் பேசி வருவதாக தெரிகிறது.