குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
அழகும், திறமையும் மிக்க நடிகைளில் நித்யா மேனனும் ஒருவர். தான் உண்டு தன் வேலையுண்டு இருப்பவர். எந்த கிசுகிசுக்களிலும் சிக்கிக் கொள்ளாதவர். மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் 2011ம் ஆண்டு, 180 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அதன் பிறகு வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவுக்கு வந்த 5 வருடங்களில் அவர் நடித்தது 3 படங்களில் மட்டும்தான். மலையாளம், கன்னடத்தில் பிடித்த இடத்தை தமிழில் பிடிக்க முடியவில்லை.
தற்போது நித்யா மேனன், தமிழில் வேகமாக முன் வரிசைக்கு வந்து கொண்டிருக்கிறார். ஜே.கே என்னும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நித்யாவின் நடிப்பை எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். ராகவா லாரன்சின் கங்கா (முனி 3), மணிரத்தினத்தின் ஓகே கண்மணி, படங்கள் வர இருக்கிறது. ரோகினி இயக்கி உள்ள அப்பாவின் மீசை படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்றாலும் ஓகே கண்மணி தனக்கு தமிழில் நல்ல இடத்தை தரும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் நித்யா மேனன்.