பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! |
முன்பெல்லாம் த்ரிஷாவை ஒரு படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்றால், முதலில் அவரது அம்மாவிடம் கதை சொல்ல வேண்டும். அவர் ஓகே என்று சிக்னல் கொடுத்தால் அதன்பிறகு த்ரிஷா காதுகளை தீட்டிக்கொண்டு அந்த கதையை கேட்பார். ஆனால், அவருக்கு பிடிக்காத காட்சிகள் இருந்தால், நோ சொல்லி விடுவார். அப்படி கடைசி நேரத்தில் த்ரிஷா ஒப்புதல் கொடுக்காத பல கதைகள் திரும்பி வந்திருக்கின்றன.
அதன்பிறகு, சில புதுமுக நடிகைகள் அதிரடி பிரவேசத்தினால் தனது கண்டிசன்களை தளர்த்திக்கொண்ட த்ரிஷா, டைரக்டர்கள் சொல்லும விசயங்களை அனுசரிக்கத் தொடங்கினார். எனக்கென்று எந்த கொள்கையும் இல்லை. டைரக்டர்கள் இந்த கதைக்கு இந்த மாதிரியான காட்சிகள் அவசியம் என்று சொன்னால், நான் குறுக்கே நிற்காமல் நடிப்பேன் என்று மாறினார்.
அதேசமயம், தான் நடிக்கிற படத்தில் வேறு கதாநாயகிகளும் இடம்பெற்றால் மட்டும், ஆரம்பத்தில் இருந்தே எதிரும்புதிருமாக இருந்து வந்தார் த்ரிஷா. அதுமட்டுமின்றி ஏதாவது சினிமா விழாக்களுக்கு சென்றால், நயன்தாரா போன்ற நடிகைகளைக்கண்டால் முகத்தை வெடுக்கென்று திருப்பிக்கொள்வார். அந்த அளவுக்கு ஈகோ நடிகையாக திகழ்ந்தார் த்ரிஷா.