குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
பிரஷாந்தின் சாஹசம் படத்திற்காக இசையமைப்பாளரும் முன்னணி பாடகருமான ஷங்கர் மஹாதேவன் பாடிய பாடல் மும்பையில் நேற்று பதிவாகியது. பெண்களை கவரும் வண்ணம் பாடலாசிரியர் கபிலன் எழுதிய...
“பட்டுசேலை வாங்கி தந்தா
பொம்பளைக்கு புடிக்கும்
அத கட்டி உட சொல்லி கேட்டா
ஆம்பளைக்கு புடிக்கும்...
பைக்கு பின்ன போறதுன்னா
பொம்பளைக்கு புடிக்கும்...
வழியில ஸ்பீட் பிரேக்கர் வந்தாக்கா
ஆம்பளைக்கு புடிக்கும்
மாமியாரு இல்லா வீடு
பொம்பளைக்கு புடிக்கும்
அங்க மச்சினிச்சி மட்டும் இருந்தா
ஆம்பளைக்கு புடிக்கும்..."
புடிக்கும் புடிக்கும் புடிக்கும்...
என இளசுகளை கவர்ந்து இழுக்கும் வண்ணம் கபிலன் எழுதிய இந்த பாடலை ஏற்கனவே ஷ்ரேயா கோஷல் மும்பையில் பாடி பதிவானது. இப்போது சாஹசம் படத்தில் பிரஷாந்த் பாடும் வரிகளை ஷங்கர் மஹாதேவன் பாடியது மிகச்சிறப்பாக வந்துள்ளது. நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான தியாகராஜன் ஏற்கனவே இன்றைய இளசுகளின் இசை சுனாமியாக திகழும் அனிருத் மற்றும் நடிகை லஷ்மி மேனன், ஆண்ட்ரியா இந்தியாவின் சிறந்த பாடகர்களான மோஹித் சவ்ஹான், ஹனிசிங், அர்ஜித் சிங் ஆகியோரை பாட வைத்துள்ளார்.
மும்பையில் ஷங்கர் மஹாதேவன் பாடல் பதிவாகும்போது உடனிருந்த பிரஷாந்த் உற்சாக மிகுதியில் ரிக்கார்ட்டிங் தியேட்டரிலேயே மகிழ்ச்சியோடு ஷங்கர் மஹாதேவனை கட்டித் தழுவி பாராட்டினாராம். பெரிய எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ள சாஹசம் பட பாடலை கேட்பதற்காக ஒட்டு மொத்த இசை பிரியர்களும் சாஹசம் படத்தின் இசை வெளியீட்டுக்காக ஆவலோடு காத்து நிற்கிறார்கள்.
தமன், சாஹசம் படத்திற்காக கடினமாக உழைத்து ஐந்து அற்புதமான பாடல்களை பதிவு செய்துள்ளதாகவும், இது பிரஷாந்தின் சாஹசம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பக்க பலமாக இருக்கும் என்றும் இசையமைப்பாளர் தமனை தியாகராஜன் பாராட்டினார். தமன் இசையமைத்த 5 பாடல்களிலும் எது சிறந்த பாடல் என முடிவு செய்வது சிரமமான விஷயம் என ஆச்சரியத்துடன் கூறினார் தியாகராஜன்.
பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.