சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில், கோச்சடையான் படம் திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக, அப்படத்தின் இயக்குனர் செளந்தர்யா மற்றும் லதா ரஜினிகாந்த் பங்கேற்றனர்.
கோவா கலா அகாடமியில், கோச்சடையான் படம் திரையிடப்பட உள்ளதாகவும், இதில் ரஜினிகாந்த் கலந்துகொள்ள இருப்பதாக விழா நிர்வாகிகளால் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. பின் படம் திரையிடும் அரங்கம் குறித்த அறிவிப்பில், ரஜினி பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
சொந்த பணி காரணமாக, ரஜினி பெங்களூருவிற்கு சென்று இருப்பதால், அவரால், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை என்று ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின் செளந்தர்யா பேசியதாவது, கோச்சடையான் எனது இயக்கத்தில் வெளிவந்துள்ள முதல் படம். முதல் படமே, கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருப்பது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளித்துள்ளது. போட்டோ- ரியலிஸ்டிக் தொழில்நுட்ப முறையில் படமாக்கப்பட்டிருக்கும் முதல்படம் இது என்றும், மற்றும் இந்த தொழில்நுட்பத்தை, தான் அறிமுகப்படுத்த வாய்ப்பு அளித்த ரஜினிக்கு, இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக செளந்தர்யா கூறினார்.