சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
'பாஸ் என்கிற பாஸ்கரன்' வெற்றிக் கூட்டணியான இயக்குனர் ராஜேஷ், ஆர்யா, சந்தானம் ஆகியோர் மீண்டும் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் ஆரம்பமாகிறது. இப்படத்தில் நாயகியாக தமன்னா நடிக்கிறார். சுமார் 11 மாத இடைவெளிக்குப் பிறகு தமன்னா நடிக்க வரும் தமிழ்ப் படம் இது. அவர் கடைசியாக தமிழில் நடித்த 'வீரம்' இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்தது. அதன்பின் வேறு எந்த தமிழ்ப் படத்திலும் அவர் நடிக்காமலே இருந்தார்.
'வீரம்' படத்திற்கு முன் சுமார் 3 வருடங்கள் தமிழ்ப் படங்களில் நடிக்காமலே இருந்தார். அவருக்கும் ஒரு நட்சத்திரக் குடும்பத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைதான் அதற்குக் காரணம் என்றும் திரையுலகில் பேசிக் கொண்டார்கள். அதனால் தமன்னாவை தமிழில் நடிக்க யாருமே அழைக்கவில்லை, அவரைத் தவிர்க்கவே செய்தார்கள் என்றெல்லாம் செய்திகள் பரவியது.
அதையெல்லாம் மீறித்தான் அஜித் அவருடைய 'வீரம்' படத்தில் தமன்னாவுக்கு தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்தார் என்றும் சொல்கிறார்கள். தற்போது ஆர்யாவுடன் ஜோடியாக ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். வழக்கம் போலவே இப்படம் கலகல காமெடிப் படமாகத்தான் உருவாக உள்ளதாம். இந்தப் புதிய படத்தில் நடிப்பது பற்றி 'முதல் நாள் ஷுட்டிங்கில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்,' என தமன்னா குறிப்பிட்டுள்ளார்.