100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
அட்டக்கத்தி மூலம் ரூட்டு தலையையும், மெட்ராஸ் படம் மூலமாக சுவர் அரசியலையும் அறிமுகப்படுத்தியவர் ரஞ்சித். மெட்ராஸ் படத்தில் வட சென்னை மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்ததன் மூலம் முக்கியமான இயக்குனராக அடையாளம் காணப்பட்டிருக்கிறார். அவரது அடுத்த படத்தை தயாரிக்க தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிபோடுகின்றன. என்றாலும் மெட்ராஸ் படத்தை தயாரித்த ஸ்டூடியோ கிரீன் நிறுவனமே அடுத்த படத்தையும் தயாரிக்கலாம் என்ற கூறப்படுகிறது.
சென்னை நகரத்து காதலையும், அரசியலையும் சொன்ன ரஞ்சித், அடுத்து இந்த இரண்டு படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு பழங்குடி மக்களின் வாழ்க்கையை படமாக எடுக்க இருக்கிறார். இதற்காக தமிழ்நாட்டில் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று கதைக்கான நிகழ்வுகளையும், களங்களையும் ஸ்டடி செய்து வருகிறார்.
"பழங்குடி மக்களின் வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்பது எனது சினிமா கனவுகளில் ஒன்று. இதற்காக உழைத்து வருகிறேன். பழங்குடி மக்கள் தொடர்பான புத்தகங்களை தேடிப்பிடித்து படித்து வருகிறேன். இதற்காக நிறைய பயணம் செய்து அவர்களை பற்றி ஆய்வு செய்கிறேன். 2015ல் எனது படம் பழங்குடி மக்களை பற்றியதாக இருக்கும்" என்கிறார் ரஞ்சித்.