சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இரண்டு ஆண்டுகளாக பெப்சி அமைப்பில் தலைவராக இருந்த டைரக்டர் அமீர் இப்போது அதிலிருந்து விடுபட்டு மீண்டும் படம் இயக்குவதில் இறங்க தயாராகி விட்டார். அதனால் மீண்டும் சினிமா விழாக்களுக்கு வரத் தொடங்கியிருக்கும் அமீர், நேற்று காலை சென்னையில் நடைபெற்ற திலகர் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டார்.
இந்த விழாவில், டைரக்டர்கள் சமுத்திரகனி, கரு.பழனியப்பன், சீனுராமசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்களில் கரு.பழனியப்பன் பேசும்போது, எந்த விழாவாக இருந்தாலும், விழா நடந்து கொண்டிருக்கும் போதுதான் அமீர் வருவார். ஆனால் இந்த விழாவுக்கு மட்டும் விழா ஆரம்பிக்கும் முன்பே வந்து விட்டார்.
நான் வீட்டில் இருந்து புறப்படும்போது அவருக்கு போன் செய்தேன். அப்போது நான் பங்சனுக்கு வந்துட்டேன் நீங்க இன்னும் வரலையா? என்று கேட்டார். அவர் அப்படி கேட்டதும் எனக்கு ஒரே ஆச்சர்யமாக இருந்தது. என்னடா இது ஒருநாளும் இல்லாத திருநாளா இருக்கு என்று நினைத்துக்கொண்டே கிளம்பினேன். இங்கு வந்த பிறகுதான் அவர் எதற்காக அதிகாலையிலேயே கிளம்பி வந்தார் என்பது எனக்கு புரிந்தது என்று சூசகமாக சொல்லி விட்டு அமர்ந்தார்.
அதையடுத்து பேசிய அமீர், கரு.பழனியப்பன் ஆரம்பித்த விசயத்தை உடைத்து விடும் வகையில் பேசினார். அதாவது, நான் விழாவுக்கு முதல் ஆளாக வந்த காரணம் நீது சந்திராதான் என்றார். யுத்தம் செய் படத்தில் என்னுடன் கன்னித்தீவு பொண்ணா என்ற பாடலில் நடனமாடியவர். 4 வருடங்களாக என்னுடன் நட்பாக இருக்கிறார். அதன்பிறகு நான் இயக்கிய ஆதிபகவன் படத்திலும் நடித்தார்.
இந்த விழாவுக்கு வந்திருக்கும் அவருக்கு அதில் சம்பந்தப்பட்ட யாரும் தெரியாது என்பதால், விழா நடைபெற்ற சத்யம் தியேட்டருக்கு முன்பே வந்து விட்டு எனக்கு போன் செய்தார். அதனால் அவருக்காக நானும் முதல் ஆளாக வரவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆக, நீதுசந்திராவுடனான நட்புதான் என்னை இழுத்து வந்தது என்பதை விழா மேடையில் தெரிவித்தார் அமீர்.