குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
பிரபல தெலுங்கு நடிகை சகுந்தலா, திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 63. தெலுங்கு சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் தெலுங்கானா சகுந்தலா. 1981-ம் ஆண்டு மா பூமி படத்தின் மூலம் அறிமுகமான சகுந்தலா, தெலுங்கில் முன்னணி வில்லி நடிகையா இருந்தார். அங்கு இவரை தெலுங்கானா சகுந்தலா என்று அழைத்தனர். 2003-ல் வெளியான ஒக்கடு தெலுங்கு படம் சகுந்தலாவை பிரபல நடிகையாக்கியது. தொடர்ந்து முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் வில்லி, காமெடி, மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
தமிழில் கூட தூள், சிவகாசி போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் சகுந்தலா என்றால் பிரபலம். ஆனால் தமிழில் சகுந்தலா என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. ஆனால் தூள் சொர்ணாக்கா என்று சொன்னால் இவரை தெரியாத தமிழ் ரசிகர்கள் யாரும் இருக்க முடியாது. அந்தளவுக்கு அந்த படத்தில் மிரட்டலான வில்லி வேடத்தில் நடித்து இருந்தார்.
ஐதராபாத்தில் வசித்து வந்த சகுந்தலாவுக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக அருகில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சகுந்தலாவின் உடன் ஆந்திர பிலிம் சேம்பர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அவரது இறுதி சடங்கு இன்று மாலையே நடந்தது. சகுந்தலாவின் திடீர் மரணம் தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.