குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
இயக்குனர் ஹரி, தற்போது விஷால், ஸ்ருதி ஹாசன் நடிக்கும் பூஜை படத்தின் படப்பிடிப்புகளை கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதியில் நடத்தி வருகிறார். சினிமா இயக்குனராகி விட்டாலும் இன்னும் அசல் கிராமத்தான் மனநிலையோடு இருப்பவர் ஹரி. பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப், இணையதளம் எதிலும் அவருக்கு ஆர்வம் கிடையாது. அவரது செல்போனைக்கூட உதவியாளர்கள்தான் கையாள்வார்கள். இந்த நிலையில் ஹரியின் பெயரில் பேஸ்புக் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டு அவரை பற்றி செய்திகள் அதில் அப்டேட் செய்யப்பட்டு வந்தது. இது தொடர்பாக நேற்று (மே 23) ஹரி கோவை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து ஒரு புகார் மனுவை அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் பல ஆண்டுகளாக சினிமா இயக்குனராக பணியாற்றி வருகிறேன். இதுவரை எனது பெயரில் நான் பேஸ்புக் கணக்கு எதுவும் தொடங்கவில்லை. திரைப்படத் துறையில் நான் பிரபலமாக இருப்பதால் இயக்குனர் ஹரி என்ற பெயரில் பேஸ்புக் கணக்கு தொடங்கி அதில் என்னை பற்றி தவறான தகவல்களை யாரோ தந்து கொண்டிருக்கிறார்கள். எனவே எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள பேஸ்புக் கணக்கை தடைசெய்து அது சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். அந்த மனுவை சைபர் கிரைமுக்கு அனுப்பிய கமிஷனர் இது தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.