தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை |
வேடப்பன், ஒரு சந்திப்பில் ஆகிய படங்களை இயக்கியவர் ஆனைவாரி ஸ்ரீதர். இவர் தற்போது சோக்கு சுந்தரம் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். குடும்ப பின்னணியில் உருவாகும் இப்படம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி கதையில் தயாராகியுள்ளது. இப்படத்துக்காக கானா பாலா ஒரு சூப்பர் ஹிட் பாடல் பாடியிருக்கிறார். அதோடு, இந்த ஆண்டு நான் பாடியதில் எனக்கு அதிக திருப்தி தந்த பாடல் இது என்றும் தனக்கு பாட வாய்ப்புக்கொடுத்த இயக்குனரை பாராட்டியிருக்கிறார்.
தற்போது இப்படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிக்கிறது. இந்நிலையில், பேலன்ஸ் இருந்த ஒரு கிளுகிளுப்பான பாடலை சமீபத்தில் இயற்கை அழகு சூழ்ந்த ஒரு லொகேசனில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ஆனைவாரி ஸ்ரீதர். புதுமுக நடிகர் ராமசாமியுடன் இணைந்து கதாநாயகி செளஜன்யா மற்றும் ரிஷா, நிஷா ஆகியோரும் ஆடுவது போன்ற பாடலாம் அது.
ஆனால், பாடலில் மூன்று நடிகைகள் இருப்பதால் கதாநாயகியான தன்னை ஓரங்கட்டி விடுவார்களோ என்று அஞ்சிய செளஜன்யா, இந்த படத்தின் கதாநாயகி நான்தான். அதனால் ஹீரோவை கட்டிப்பிடித்து நான் மட்டுமே ஆடுவேன. மற்ற நடிகைகள் வேண்டுமானால் எட்டி நின்று ஆடிவிட்டு போகட்டும் என்று டைரக்டரிடம் மல்லுக்கு நின்றாராம். பாடலின் சூழலை எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் அவர் கேட்பதாக இல்லையாம். இதனால் வேறு வழியில்லாமல் ஹீரோ ராமசாமியை கட்டிப்பிடித்து ஆடும் ஷாட்களை செளஜன்யாவை வைத்தே படமாக்கி விட்டு, மற்ற நடிகைகளை குரூப் டான்சர்ஸ் ஆடுவது போன்று படமாக்கினார்களாம்.
கதாநாயகனை விட்டுக்கொடுக்காமல் செளஜன்யா செய்த இந்த அன்புச்சண்டை அவர் மீது கோலிவுட்டிலுள்ள இளவட்ட ஹீரோக்களுக்கு ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தி விட்டுள்ளது. ஆக, கன்னட நடிகை செளஜன்யா சோக்கு சுந்தரம் படத்திற்கு பிறகு கோடம்பாக்கத்தில் ஒரு பெரிய ரவுண்டு வருவதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருகிறது.