100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
நான் ஈ படத்தை அடுத்து, கெளதம்மேனன் இயக்கிய நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்தார் சமந்தா. ஆனால், அந்த படம் வெற்றி பெறவில்லை. அதனால், அந்த சமயத்தில் சமந்தாவுடன் நடிக்க வேண்டுமென்ற ஆசை எந்த கோலிவுட் ஹீரோக்களுக்கும் ஏற்படவில்லை. அதேசமயம் அதே படம் தெலுங்கில் மெகா ஹிட்டானது. அதனால், தொடர்ந்து ஆந்திராவின் ராசியான கதாநாயகியாக திகழ்ந்து கொண்டு வருகிறார் சமந்தா.
இந்த நிலையில், சமந்தாவின் தெலுங்கு மார்க்கெட்டை கருத்தில் கொண்டு சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் நடிப்பதற்காக லிங்குசாமி புக் பண்ணியதை அடுத்து, இப்போது விஜய்யைக்கொண்டு தான் இயக்கும் கத்தி படத்திற்காகவும் சமந்தாவையே புக் பண்ணியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆக ஒரே நேரத்தில் இரண்டு மெகா ஹீரோக்களின் படங்களில் நடிப்பதால், அடுத்து தமிழில் சமந்தாவுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்பதை இப்போதே உணர்த்தி விட்டது. அதோடு நடித்து வரும் படங்களில் அதிரடி கிளாமராக நடித்தும் கலக்கி எடுத்திருக்கிறாராம் சமந்தா.
அதன்காரணமாக கோலிவுட்டிலுள்ள மேலும் சில முன்னணி ஹீரோக்களுக்கும் சமந்தாவுடன் ஜோடி சேரும் ஆசை மேலோங்கி நிற்கிறது. அதில் ஆர்யா, விஷால் போன்றவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால், அவர்கள் இன்னும் அது சம்பந்தமாக சமந்தாவை அணுகவில்லை. அதேசமயம், தற்போது 'ஐ' படத்தில் எமிஜாக்சனுடன் டூயட் பாடிவிட்டு வந்திருக்கும் விக்ரம், விஜய்மில்டன் இயக்கத்தில் தான் நடிக்கும் புதிய படத்திற்கு சமந்தாவை புக் பண்ணுமாறு கூறியுள்ளார். ஆக, சமந்தாவின் கோலிவுட் பட பட்டியலில் இன்னும் வேகமாக வளரும் என்று தெரிகிறது.