விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
நடிகை அனன்யா நாடோடிகள் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானபோது, நதியாவைப்போல் ஒரு ரவுண்ட் வருவார் என அவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. எதிர்பார்ப்புக்கு மாறாக, தமிழில் கவனம் செலுத்தாமல் மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தியதால் அனன்யாவுக்கு தமிழில் பெரிய இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த வருடம் திடீர் திருமணம் செய்து கொண்டார் அனன்யா. திருமணத்துக்கு முன் மலையாளத்தில் அனன்யாவுக்கு ஓரளவு பட வாய்ப்புகள் கிடைத்தது வந்தது. திருமணம் செய்து கொண்டதால் நடிகை அனன்யாவுக்கு மலையாளத்தில் பட வாய்ப்புகள் குறைந்துபோனது. படவாய்ப்புகள் குறைந்ததால், பண வரவுகளும் குறைந்துவிட்டது. எனவே தமிழ்ப்படங்களில் கவனம் செலுத்துவது என்று முடிவு செய்திருக்கும் அனன்யா, அதற்கான முயற்சியிலும் இறங்கி உள்ளார்.
கடைசியாக அவர் நடித்த புலிவால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. தற்போது நந்தா உடன் அதிதி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக சென்னைக்கு வரும் அனன்யா நேரம் கிடைக்கும்போதெல்லாம் முன்னணி ஹீரோக்களை நேரில் சந்தித்து வாய்ப்பு கேட்டு வருகிறார்.