100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
கடந்த 13-ந்தேதி தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை வந்த பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டுக்கும் சென்று அவரை சந்தித்து பேசினார். இதனால் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், அதையடுத்து ரஜினி விடுத்த செய்தியில், மோடி அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்றபோதும், என்னை ஒரு நண்பராகவே சந்திக்க வந்தார். அவர் என் நலனில் எப்போது அக்கறை கொண்டவர். நான் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நேரில் வந்து நலம் விசாரித்தார். நான் வீட்டுக்கு வந்த பிறகும், அடிக்கடி போன் போட்டு நலம் விசாரித்தார். அதனால் அவர் எனது நண்பராகி விட்டார் என்றார்.
இந்நிலையில், மோடி-ரஜினி சந்திப்பு குறித்து சமீபத்தில் லதா ரஜினிகாந்த் அளித்துள்ள ஒரு பேட்டியில், மோடி ஒரு நல்ல மனிதர். எங்கள் குடும்பத்தின் மீது அக்கறை கொண்டவர். அந்த வகையில், என் கணவரை அவர் ஒரு நண்பராகத்தான் எங்கள் வீட்டிற்கு வந்து சந்தித்தார். அந்த வகையில், அவர் எங்கள் வீட்டுக்கு வந்து எங்களை கவுரவப்படுத்தி விட்டார் என்று கூறியுள்ளார்.