100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
ராவணன், கடல் படங்களின் அதிர்ச்சி தோல்விகளுக்குப்பிறகு அடுத்த படத்தை இயக்குவதில் அதிக காலதாமதம் செய்து கொண்டிருக்கிறார் மணிரத்னம். மணிரத்னம் படங்களென்றால் அதிக நம்பிக்கையுடன் தியேட்டருக்கு சென்ற ரசிகர்களின் நம்பிக்கையை இந்த இரண்டு படங்களும் கெடுத்து விட்டதால், மீண்டும் பழைய நம்பிக்கைக்குரிய மணிரத்னமாக வேண்டும் என்பதற்காக புதிய படத்தின் கதை விசயத்தில் அதிக சிரத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார் அவர்.
ஆனால், இந்த படத்தில் பழைய கூட்டணிகளான நாகார்ஜூனா, ஐஸ்வர்யாராய் ஆகியோரையும் சேர்த்திருப்பதால் பழைய சாயல் வந்து விடுமோ என்ற கருத்தினையும் சிலர் அவர் முன்பு வைத்தபோது, இப்படத்தில் மகேஷ்பாபுதான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அந்த வகையில் என் படத்துககு அவர் புதியவர்தான் என்று பதிலுரைத்துள்ள மணிரத்னம், இப்படத்தை தயாரிப்பதற்கு யாராவது மெகாப்பட தயாரிப்பாளர்கள் முன்வருவார்களா? என்று காத்திருந்தார்.
ஆனால், அப்படி யாரும் வருவதற்கான சூழ்நிலை இல்லை என்பதால், இப்போது மீண்டும் தனது மெட்ராஸ் டாக்கீஸ் மூலமே புதிய படத்தை தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம் அவர்.