சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
தனது கானா பாடல்கள் மூலமும், அக்மார்க் சென்னை முகச்சாயல் மூலமும் திடீர் புகழ்பெற்றவர் கானா பாலா. அட்டகத்தியில் ஆடி போனா ஆவணி அவள் ஆளை மயக்கும் தாவணி என்று பாடி வந்தவருக்கு இப்போது அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. "என்னைய ஹீரோவோ போட்டு யாராவது படம் எடுங்களேன்" என்று மேடைக்கு மேடை தமாஷ் பண்ணிக் கொண்டிருந்தவர் இப்போது நிஜமாகவே ஹீரோவாகிறார்.
விஜய்யின் ஆரம்பகால படங்களான நினைத்தேன் வந்தாய், பிரியமானவளே, வசீகரா ஆகியவற்றை இயக்கியவர் செல்வபாரதி, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கப்போகும் படம் பாரீஸ் கார்னர். இந்தப் படத்தில்தான் கானா பாலா ஹீரோவாக நடிக்கிறார்.
சென்னைக்கு வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் எல்லாம் பெரிய ஆளாகிவிட்டார்கள். செல்வ செழிப்பில் இருக்கிறார்கள். ஆனால் சென்னையின் பூர்வகுடி மக்கள் இப்போதும் வறுமையில்தான் இருக்கிறார்கள், கூவத்தின் கரையில் வாழ்கிறார்கள் என்பதை சொல்லப்போகும் படம். அதில் கானா பாலா பாரீஸ் கார்னரில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவராக நடிக்கிறார். படத்தில் வரும் அத்தனை பாடல்களும் கானா பாட்டுதான், அவரே பாடுகிறார்.