குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
சம்பளப் பிரச்னை, சங்கத்தினரை தாக்கியவர்களின் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்காதது உட்பட, பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, சினிமா தொழிலாளர் சம்மேளனமான, "பெப்சி சார்பில், சென்னையில் இன்று பேரணி துவங்கியது.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான, "பெப்சி சென்னை வடபழனியில் இயங்கி வருகிறது. இதில், 23 சங்கங்கள் உள்ளன. சினிமா மற்றும், "டிவி சீரியல்களில் பணிபுரியும், இச்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும்; சங்கங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளை தீ"ர்க்க வேண்டும்; சம்மேளனத்தில் உள்ள சங்கங்களுக்கு தொல்லை தருபவர்களின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். சம்மேளன நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத, போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது உட்பட, பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, "பெப்சி சார்பில், சென்னையில் இன்று பேரணி நடத்தப்படுகிறது.
இன்று காலை, 10:30 மணிக்கு, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி துவங்கியது. டைரக்டர் அமீர் தலைமையில் துவங்கிய இந்த பேரணியில் வாசு, விக்ரமன், எஸ்.பி.முத்துராமன், ஜனநாதன் உள்ளிட்ட பிரபல இயக்குநர்களுடன் பெப்சியை சேர்ந்த 23 சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். பேரணி முடிந்ததும், "பெப்சி நிர்வாகிகள், தலைமை செயலகத்தில் முதல்வரை சந்திக்க உள்ளனர்.