குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
கேடி படத்தில் தமிழுக்கு வந்தவர் தமன்னா. இதே படத்தில் இலியானாவும் நடித்திருந்தார். ஆனால், அவருக்கு அதன்பிறகு தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை. ஆனால் தமன்னா அதிரடி முயற்சிகளை மேற்கொண்டு கோடம்பாக்கத்தில் கோலோச்சி விட்டார். சில காலம் கனவுக் கன்னியாகவும் விளங்கியவர் பின்னர் பாலிவுட்டுக்கு சென்றார். ஆனால், அங்கே இவரது நடிப்பு எடுபடவில்லை. அதனால் தென்னிந்தியாதான் தனக்கு ஏற்ற இடம் என்று மீண்டும் தமிழ், தெலுங்கில் பிரவேசித்துள்ளார் தமன்னா.
இந்த நிலையில, ஏற்கனவே தெலுங்கில் பேசக்கூடிய தமன்னா, இப்போது தமிழையும் பயின்று விட்டார். முன்பு ஓரளவு பேசியவர் இப்போது சரளமாக தமிழ் பேசுகிறார். இதனால் எனக்கு தமிழ் தெரிந்த நடிகையே வேண்டும் என்று சொல்லும் சில டைரக்டர்களை சந்தித்து எனக்கு தமிழ் நன்றாகவே தெரியும். இனி நானும் தமிழ் நடிகைதான் என்று தமிழிலேயே பேசி வருகிறார்.
இதையடுத்து, தமன்னா இந்தி பொண்ணாச்சே. அதுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கிறதுக்குள்ள உசிரு போயிடுமே என்று அலுத்துக்கொண்ட உதவி இயக்குனர்களெல்லாம், இப்போது தமன்னாவுக்குதான் நல்லா தமிழ் தெரியுதே என்று தங்களது இயக்குனர்களிடம் சிபாரிசு செய்யத் தொடங்கியுள்ளனர். ஆக, தமன்னாவின் கொடி மீண்டும் கோடம்பாக்கத்தில் கோலாகலமாக பறக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.