‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி படம் இன்னும் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்க வேண்டியது. ஆனால், அளவுக்கு அதிகமான வன்முறை, ரத்தம், சரியான கதை, திரைக்கதை இல்லாதது முக்கியமான காரணமாக விமர்சிக்கப்பட்டது. ரஜினிகாந்த், அமீர்கான், நாகர்ஜூனா, உபேந்திரா, சவுபின் ஷாகீர், என பல ஸ்டார்கள் இருந்தனர்.
அதேபோல், தனுஷை வைத்து அருண் மாதேஸ்வரன் இயக்கிய கேப்டன் மில்லர் தோல்விக்கும் வன்முறை, சரியான திரைக்கதை இல்லாதது காரணம் என்று கூறப்பட்டது. இதற்குமுன்பு அருண் மாதேஸ்வரன் இயக்கிய ராக்கி, சாணிகாயிதம் படங்களிலும் ரத்தம் தெறித்தது. இந்த படங்களை வெற்றி படங்கள் வரிசையில் யாரும் குறிப்பிடவில்லை.
இந்நிலையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி என்ற படத்தில் கதை நாயகனாக நடித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படமும் ரத்தத்தில் குளிக்கிறது என்பது முதல் டீசரில் தெளிவாக தெரிகிறது. இவர்கள் இருவரும் இவ்வளவு வன்முறையை தங்கள் படத்தில் காண்பிப்பது ஏன்? இவர்கள் மனதில் என்ன இருக்கிறது. மக்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறார்கள்.
ஒரு கமர்ஷியல் படத்தை ரத்தக்காடாக மாற்றுவதுதான் இவர்கள் பாணியா? இரண்டு பேருக்கும் ஒரு வெற்றி படம் தேவை என்ற நிலையில், மீண்டும் அதே வன்முறை பாதைக்கு செல்வது ஏன் என்று கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், அவர்கள் தரப்போ சில நிமிட டீசரை வைத்து படத்தை முடிவு செய்யக்கூடாது. படம் வந்தபின் பாருங்கள் என்கிறார்கள்.