'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் | வயலில் நாற்று நட நெல்லை மக்கள் தந்த பயிற்சி: அனுபமா பரமேஸ்வரனின் 'பைசன்' அனுபவம் | உழைக்கும் கரங்கள், எஜமான், கண்ணப்பா - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வெள்ளிவிழா ஆண்டின் நிறைவில் விண்வெளி நாயகன் கமல்ஹாசனின் “தெனாலி” | நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு |
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகிய இருவரும் சேர்ந்து தொழிலதிபர் ஒருவரிடம் 60 கோடி மோசடி செய்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்து அதுகுறித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு தனது வழக்கறிஞர் மூலம் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார் ஷில்பா ஷெட்டி. ஆனால் அந்த மனுவை விசாரித்த நீதிபதி, அந்த 60 கோடியை டெபாசிட் செய்தால் அனுமதி தர பரிசீலிப்பதாக தெரிவித்தது.
இதற்கிடையே ஷில்பாவும் அவரது கணவரும் வெளிநாடு செல்ல அனுமதி கேட்ட மனுவை வாபஸ் பெற விரும்புவதாக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதை நீதிமன்றமும் ஏற்றது. எதிர்காலத்தில் வெளிநாடு செல்ல வேண்டியிருந்தால் மனு செய்வதாக இருவரும் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற கெடுபிடியால் ஷில்பாவும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ளனர்.