சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகிய இருவரும் சேர்ந்து தொழிலதிபர் ஒருவரிடம் 60 கோடி மோசடி செய்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்து அதுகுறித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு தனது வழக்கறிஞர் மூலம் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார் ஷில்பா ஷெட்டி. ஆனால் அந்த மனுவை விசாரித்த நீதிபதி, அந்த 60 கோடியை டெபாசிட் செய்தால் அனுமதி தர பரிசீலிப்பதாக தெரிவித்தது.
இதற்கிடையே ஷில்பாவும் அவரது கணவரும் வெளிநாடு செல்ல அனுமதி கேட்ட மனுவை வாபஸ் பெற விரும்புவதாக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதை நீதிமன்றமும் ஏற்றது. எதிர்காலத்தில் வெளிநாடு செல்ல வேண்டியிருந்தால் மனு செய்வதாக இருவரும் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற கெடுபிடியால் ஷில்பாவும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ளனர்.