சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

ஜி.வி.பெருமாள் இயக்கத்தில் இந்த வாரம் வெளி வர இருக்கும் படம் சரீரம். தர்ஷன், சார்மி ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். காதல், பெற்றோர்கள் எதிர்ப்பு, நண்பர்கள் துணையுடன் ஊரை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்ய நினைக்கிறார்கள் என்ற வழக்கமான கதை என்றாலும், ஒரு கட்டத்தில் கதையில் புதுமை செய்து இருக்கிறார் இயக்குனர். அதாவது, எதிர்ப்பு காரணமாக மாமல்லபுரத்தில் தஞ்சம் அடிக்கிறது காதல் ஜோடி. அங்கேயும் அடியாட்கள் அவர்களை துரத்த, நம்மால் நிம்மதியாக வாழ முடியாது, ஏதாவது செய்யணும் என்று காதலர்கள் முடிவெடுக்கிறார்கள். தங்கள் அடையாளத்தை மாற்ற நினைத்து ஹீரோ பிரியன் பெண்ணாக மாறவும், ஹீரோயின் ஆணாக மாறவும் நினைக்கிறார்கள். இதற்காக, டாக்டர் உதவியுடன் ட்ரீட்மென்ட், ஆபரேசன் செய்ய நினைக்கிறார்கள்.
முதற்கட்டமாக இருவரும் உருவ அளவில் மாறுகிறார்கள். ஹீரோயினுக்கு மீசை வளர்கிறது, அவர் ஓட்டல் வேலைக்கு சேருகிறார். அந்த ஓட்டலுக்கு வரும் அப்பாவால் கூட மகளை அடையாளம் கண்டுபிடிக்க முடியாத மாற்றம். ஹீரோ பெண்தன்மைக்கு மாறி பெட்ரோல் பங்கில் பணியாற்றுகிறார். அவரை பெண் என நினைத்து சிலர் டார்ச்சர் செய்கிறார்கள். கடைசியில் அந்த காதல் என்னவானது என்ற ரீதியில் கதை செல்கிறது. இப்படிப்பட்ட காதல் கதை தமிழ் சினிமாவில் வந்தது இல்லை. நிஜ திருநங்கைகள் பலர் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். சரீரம் என்றால் உடல் என அர்த்தம். காதலுக்காக தங்கள் உடலையே மாற்ற நினைக்கும் காதலர்களுக்கு என்ன நடக்கிறது என்பது கதை என்கிறார் இயக்குனர்.