என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

கடந்த 2016ம் ஆண்டில் பாஸ்டியன் என்ற உணவகத்தை மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் திறந்தார் நடிகை ஷில்பா ஷெட்டி. அதன் பிறகு அதே பாந்த்ராவில் ஒரு பெரிய இடத்துக்கு அது மாற்றப்பட்டு உணவு பிரியர்கள் மற்றும் பிரபலங்களுக்கான ஒரு இடமாக மாறியது. 
இந்த நிலையில் தனது இணையப் பக்கத்தில் ஷில்பா ஷெட்டி வெளியிட்டுள்ள ஒரு பதிவில், தனது மும்பை உணவகமான பாஸ்டியன் செப்டம்பர் 4ம் தேதியான நாளை மூடப்படுவதாக தெரிவித்திருக்கிறார். தனது நட்பு வட்டாரத்துக்கு இன்று அவர் ஒரு இரவு  விருந்தும்  கொடுக்கிறார். என்றாலும் எதற்காக அந்த ஓட்டல் மூடப்படுகிறது என்பது குறித்து அவர் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. 
மேலும் தற்போது ஷில்பா ஷெட்டியும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் 60 கோடி ரூபாய் கடன் மற்றும் முதலீடு முறைகேட்டில் சிக்கி இருக்கிறார்கள். இதுபோன்ற பிரச்னைக்காக கூட அவர்கள் அந்த ஹோட்டலை விற்பனை செய்யலாம் என்கிற கருத்துக்களும் வெளியாகி உள்ளன.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            