உண்மை எப்போதும் வெல்லும் : ஆர்த்தி பதிவு; குஷ்பு ஆதரவு | விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி | என் மனைவியை காப்பாற்றுங்க : முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை வேண்டுகோள் | விவாகரத்து வரை சினிமாவிற்கு முழுக்கு, என் குடும்பத்தை கெடுத்தவர் மூன்றெழுத்து நடிகை : ரவி மோகன் கண்ணீர் பேட்டி | 'ஜனநாயகன்' படத்தை கசிய விட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது | ஒன்றிணைந்து பேசுவோம் : திரையுலகினருக்கு கமல்ஹாசன் அழைப்பு | ரவி மோகனை பிரிந்தார் கெனிஷா : சென்னையை விட்டும் வெளியேறினார் | தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா |

ஆந்திர துணை முதல்வராக இருக்கும் பவன் கல்யாண் நடித்த 'ஹரிஹர வீரமல்லு' படம் கடந்த மாதம் வெளியானது. எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் படம் நஷ்டத்தை சந்தித்தது. இப்படத்திற்காக சில நாட்கள் தன்னுடைய அரசு வேலைகளைத் தள்ளி வைத்துவிட்டு, படத்திற்கு புரமோஷன் செய்தார் பவன் கல்யாண்.
இந்நிலையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், லிபரேஷன் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான விஜயகுமார் என்பவர் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பவன் கல்யாண் மீது வழக்கு தொடுத்துள்ளார். அரசு பணத்தை அவரது படத்தின் புரமோஷனுக்காக அவர் பயன்படுத்தியுள்ளதாகவும், டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியதாகவும், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.
"தனது வருமானத்திற்காக திரைப்படங்களில் நடிப்பதாக பவன் பகிரங்கமாகக் கூறியதன் மூலம், அவர் விதிகளை மீறியதை ஒப்புக்கொண்டார்," என்று அவர் கூறி, இது 1988ம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழும் வருவதாகவும், இது பொது பிரதிநிதிகள் தங்கள் பதவிகளை தனிப்பட்ட லாபத்திற்காகப் பயன்படுத்துவதைத் தடை செய்வதாகவும் தெரிவித்தார்.
பவன் கல்யாணை அமைச்சரவையிலிருந்து நீக்கக் கோரி தலைமைச் செயலாளருக்கும், ஊழல் தடுப்பு பிரிவு இயக்குநர் ஜெனரலுக்கும் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்ததாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அவர் உயர்நீதிமன்றத்தை அணுகியதாகவும் கூறினார்.
வழக்கை ஏற்றுக்கொண்ட பின்னர், நீதிமன்றம் சிபிஐ மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு வழக்கறிஞர்களை பதிவேட்டில் சேர்க்க உத்தரவிட்டது. விசாரணை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.