Advertisement

சிறப்புச்செய்திகள்

என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி

16 ஆக, 2025 - 02:49 IST
எழுத்தின் அளவு:
Prime-Minister-Modi-congratulates-Rajinikanth-on-his-50th...-in-cinema-Thank-you
Advertisement

நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதற்கு அரசியல் தலைவர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை பல்வேறு தரப்பினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியும் ரஜினியை வாழ்த்தி உள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் தமிழில் வெளியிட்ட பதிவில், ‛‛திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் திரு ரஜினிகாந்த்திற்கு வாழ்த்துகள். அவரது பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. அவரது நடிப்பில் பலவகையான பாத்திரங்கள் தலைமுறைகள் கடந்து மக்கள் மனங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவரது தொடர்ச்சியான வெற்றிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் வாழ்த்துகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள ரஜினி, எக்ஸ் தளத்தில், ‛‛மதிப்பிற்குரிய மோடி ஜி, உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நான் மிகவும் நன்றியுடையவன். நீண்ட காலமாக மிக உயர்ந்த மரியாதையில் வைத்திருக்கும் ஒரு தலைவரிடமிருந்து இவற்றைப் பெறுவது உண்மையிலேயே கவுரவமாகும். உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திரா முதல்வர் வாழ்த்து
இதேப்போல் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‛‛சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 மகத்தான ஆண்டுகள் திரையுலகில் நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள். அவரது அற்புதமான திரைப் பயணத்தில், தனது பிரமிக்க வைக்கும் நடிப்பால் மில்லியன் கணக்கானவர்களை மகிழ்வித்தது மட்டுமல்லாமல், தனது திரைப்படங்களை சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு ஊடகமாகவும் பயன்படுத்தியுள்ளார். அவரது படைப்புகள் சமூகத்தில் முக்கியமான பிரச்னைகளைப் பற்றி சிந்திக்க வைத்து, எண்ணற்ற உயிர்களை அர்த்தமுள்ள மற்றும் நோக்கமுள்ள வாழ்க்கையால் தொட்டுள்ளன. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

இவருக்கும் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார்.
ஆந்திர துணை முதல்வர் வாழ்த்து
நடிகரும், ஆந்திரா துணை முதல்வருமான பவன் கல்யாண் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'சூப்பர் ஸ்டார் ரஜினி' என்ற பட்டம் வெள்ளித்திரையில் தோன்றும்போது திரை அரங்கமே அதிரும் என்பதை சென்னையில் பலமுறை பார்த்திருக்கிறேன். தலைமுறைகள் மாறினாலும், இந்த மகிழ்ச்சி குறையவில்லை. இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளத்தை வென்ற உச்ச நாயகன் ரஜினிகாந்த். ஒரு நடிகராக ஐந்து தசாப்தங்கள் நிறைவு செய்துள்ளார் என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. தனது திரைப்பட வாழ்க்கையில் பொன்விழாவைக் கொண்டாடும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நடிகராக அவரது பயணம் பலருக்கு உத்வேகமாக இருந்து வருகிறது. அவர் வில்லனாக நடித்தாலும் சரி, ஹீரோவாக நடித்தாலும் சரி, ரஜினிகாந்த் தனக்கென உரிய பாணியில் நடித்து பார்வையாளர்கள் மனதில் அழியாத முத்திரையைப் பதித்துள்ளார். அவர் தனது நடை, வசனங்கள் மற்றும் சைகைகளில் தனித்துவத்தைக் காட்டுகிறார். புதிய தலைமுறையிலும் ரஜினிகாந்த் ஸ்டைலுக்கு ரசிகர்கள் உள்ளனர். ஒரு நடிகராக தனது வாழ்க்கையின் உச்சத்தை எட்டிய ரஜினிகாந்த், மகாவதார் பாபாஜியின் பக்தராக ஆன்மீக விஷயங்களிலும், யோகா பயிற்சியில் சிறப்பு கவனம் செலுத்துகிறார், இது அவரது பக்தி மற்றும் மத நம்பிக்கையை காட்டுகிறது. ஒரு நடிகராக தனது பொன் விழாவைக் கொண்டாடும் ரஜினிகாந்த், இன்னும் பல வேடங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விப்பார் என்று நம்புகிறேன். ரஜினிகாந்திற்கு முழுமையான ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் வழங்க கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா?கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ... அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் அப்படி நடித்ததால் ரசிகர்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in