கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் | ஜனநாயகன் படம் மறு தணிக்கை செல்கிறது : வழக்கை வாபஸ் பெற மனு |

மோகன்லால் நடிப்பில் கடந்த 1992ல் மலையாளத்தில் வெளியான படம் சதயம். பிரபல எழுத்தாளர் எம்டி வாசுதேவன் நாயர் எழுதிய கதையை இயக்குனர் சிபி மலயில் இயக்கியிருந்தார். சதானந்தன் என்கிற தூக்கு தண்டனை கைதி கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்திருந்தார். இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் கண்ணூர் சென்ட்ரல் ஜெயிலில் படமாக்கப்பட்டது. அப்போது தூக்குத் தண்டனை கைதியாக நடித்த மோகன்லாலுக்கு தரப்பட்டிருந்த அறை நிஜமாகவே ரிப்பர் சந்திரன் மற்றும் பாலகிருஷ்ணன் என்கிற இரண்டு கொலை கைதிகள் தங்கி இருந்த அறை தான்.
அது மட்டுமல்ல அந்த படத்தை மோகன்லாலை தூக்கில் போடுவது போல தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டிவிடும் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அதன்பிறகு அங்கிருந்து அதிகாரி ஒருவர் மோகன்லாலிடம் வந்து இப்போது உங்கள் கழுத்தில் மாட்டப்பட்ட கயிறு கூட 13 வருடங்களுக்கு முன்பு ஒருவரை தூக்கில் போட பயன்படுத்தப்பட்ட கயிறு தான் என்று சொன்னதும் மோகன்லால் அதிர்ச்சி அடைந்து விட்டாராம். எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத ஒரு அனுபவம் தனக்கு அந்த படத்தில் கிடைத்ததாக மோகன்லால் பின்னர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.




