'ஜனநாயகன், டாக்சிக்' : அடுத்தடுத்த சர்ச்சையில் தயாரிப்பு நிறுவனம் | அவதூறு பரப்பும் விஜய் ரசிகர்கள்! - சாடிய இயக்குனர் சுதா கொங்கரா | அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்; அறிவிப்பு வெளியானது | பராசக்தி என் நடிப்புக்கான முழுமையான அங்கீகாரத்தை கொடுத்து விட்டது! -ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | தனுஷ் 54வது படத்தின் புதிய அப்டேட்: நாளை பொங்கல் தினத்தில் வெளியாகிறது! | பொங்கல் பண்டிகையை தித்திப்பாக்கும்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | மீண்டும் இணைந்த 'தகராறு' கூட்டணி! | சம்மர் 2026ல் ரிலீஸ்: உறுதிப்படுத்திய அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் படம்! | 2 நாட்களில் ரூ.120 கோடி வசூலைக் கடந்த 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படம் | தமிழில் பேச முயற்சிக்கும் ஸ்ரீலீலா |

நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்கிறார். இது குறித்த வேலைகள் தற்போது மும்பையில் நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பும் கூட தற்போது துவங்கிவிட்டது என்று சொல்லப்பட்டாலும் அது குறித்த தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்பு நடிகர் அல்லு அர்ஜுன் மும்பை சென்று விட்டு படம் குறித்த பணிகளில் கலந்துகொண்டு நேற்று (ஆக.,9) காலை தான் மும்பையில் இருந்து ஹைதராபாத் திரும்பியுள்ளார். மும்பை விமான நிலையத்தில் அவர் உள்ளே நுழையும் போது முகத்தில் மாஸ்க்கும் கண்களில் கருப்பு கண்ணாடியும் அணிந்தபடி தனது டிக்கெட்டை காட்டி உள்ளே நுழைய முயற்சித்தார்.
ஆனாலும் பாதுகாப்பு அதிகாரி அவரது முக அடையாளத்தை காட்டும்படி கேட்டுக் கொண்டதால் வேறு வழியின்றி முதலில் கண்ணாடியை கழற்றிய அல்லு அர்ஜுன், அதுவும் போதாதா என்று கேட்கும் விதமாக வேகமாக தனது மாஸ்கை கழட்டி காட்டி பிறகு அதை மீண்டும் அணிந்து கொண்டார். அதன் பிறகு அதிகாரிகள் அவரை உள்ளே செல்ல அனுமதித்தனர். இது வழக்கமான நடைமுறை தான் என்றாலும் அல்லு அர்ஜுன் என்ன, யாராக இருந்தாலும் மாஸ்க், கண்ணாடி அணிந்தால் அவர்கள் முழு உருவம் யாருக்கும் சரியாக தெரியாது என்பதாலும் தான் இந்த சோதனை என்றாலும் அல்லு அர்ஜுன் இதனால் சற்றே கோபமானார் என்பது அந்த வீடியோவை பார்க்கும் போது தெரிகிறது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.