சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' | இயக்குனர் அவதாரம் எடுக்கும் கென் கருணாஸ்! | 'கூலி' பட டிக்கெட் கட்டணம் ரூ.500: தியேட்டர்களுக்கு தரப்படும் அழுத்தம்! | மிஷ்கின் என்னை பாப்பா என்று அழைப்பார்! : ஸ்ருதிஹாசன் | ரஜினிக்கு வாழ்த்து சொன்ன சந்திரபாபு நாயுடு மகன் |
நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்கிறார். இது குறித்த வேலைகள் தற்போது மும்பையில் நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பும் கூட தற்போது துவங்கிவிட்டது என்று சொல்லப்பட்டாலும் அது குறித்த தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்பு நடிகர் அல்லு அர்ஜுன் மும்பை சென்று விட்டு படம் குறித்த பணிகளில் கலந்துகொண்டு நேற்று (ஆக.,9) காலை தான் மும்பையில் இருந்து ஹைதராபாத் திரும்பியுள்ளார். மும்பை விமான நிலையத்தில் அவர் உள்ளே நுழையும் போது முகத்தில் மாஸ்க்கும் கண்களில் கருப்பு கண்ணாடியும் அணிந்தபடி தனது டிக்கெட்டை காட்டி உள்ளே நுழைய முயற்சித்தார்.
ஆனாலும் பாதுகாப்பு அதிகாரி அவரது முக அடையாளத்தை காட்டும்படி கேட்டுக் கொண்டதால் வேறு வழியின்றி முதலில் கண்ணாடியை கழற்றிய அல்லு அர்ஜுன், அதுவும் போதாதா என்று கேட்கும் விதமாக வேகமாக தனது மாஸ்கை கழட்டி காட்டி பிறகு அதை மீண்டும் அணிந்து கொண்டார். அதன் பிறகு அதிகாரிகள் அவரை உள்ளே செல்ல அனுமதித்தனர். இது வழக்கமான நடைமுறை தான் என்றாலும் அல்லு அர்ஜுன் என்ன, யாராக இருந்தாலும் மாஸ்க், கண்ணாடி அணிந்தால் அவர்கள் முழு உருவம் யாருக்கும் சரியாக தெரியாது என்பதாலும் தான் இந்த சோதனை என்றாலும் அல்லு அர்ஜுன் இதனால் சற்றே கோபமானார் என்பது அந்த வீடியோவை பார்க்கும் போது தெரிகிறது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.