விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
சமீபத்தில் 8 மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்க முடியும். அதற்கு மேல் முடியாது என்கிற காரணத்திற்காக சந்தீப் ரெட்டி வங்காவின் 'ஸ்பிரிட்' படத்தில் இருந்து தீபிகா படுகோன் வெளியேறி இருந்தார். இப்போது வரை பாலிவுட்டில் இது குறித்து சர்ச்சை கருத்துக்கள் பரவி தான் வருகிறது.
தற்போது ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்திய பதிப்பிற்கு பேட்டி அளித்த வித்யா பாலனிடம் தீபிகா படுகோனின் இந்த செயல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் கூறியதாவது, "தாய்மார்கள் குறைந்த மணி நேரங்கள் வேலை, நெகிழ்வு நேரங்களில் வேலை செய்வதற்கான உரையாடல்கள் தற்போது அனைத்து துறைகளிலும் நடைபெற்று வருகிறது. அவை நியாயமான உரையாடல்கள் என்று நான் கருதுகிறேன்.
குழந்தைகள் பெற்றெடுக்கும் ஆரம்ப ஆண்டுகளில் புதிய தாய்மார்கள் அல்லது பெண்களை நாம் இழக்காமல் இருக்க ஒவ்வொரு துறையும் அந்த நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனர். பெண்களுக்கு நெகிழ்வான வேலை நேரங்கள் இருப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். நான் நடிக்கும் படங்களில் எட்டு மணி நேரம் மட்டும் வேலை செய்தால் போதாது. ஏனெனில், நான் ஒரு தாய் அல்ல. அதனால், என்னால் 12 மணிநேர படப்பிடிப்பில் பணிபுரிய முடியும்" என்று தெரிவித்திருக்கிறார்.