ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா | தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் | சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர் | தனக்கு விருது வாங்கித் தந்த படத்தை 4 வருடமாகியும் பார்க்கத் தயங்கும் ரேவதி | அறிமுகப் படம் வெளியாகும் முன்பே அடுத்த வாய்ப்பு பெற்ற சிவகுமார் முருகேசன் | 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடை | மோகன்லால் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பிரியதர்ஷன் | சிரஞ்சீவிக்கு முதல் திருமண அழைப்பிதழ் வைத்த அல்லு சிரிஷ் | 10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது |

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் ஸ்ரீ லீலா, தற்போது தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‛பராசக்தி' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். அதோடு ஹிந்தியில் ‛ஆஷிகி -3' என்ற படத்தில் கார்த்திக் ஆரியனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.
இந்தநிலையில் தற்போது பாலிவுட் ஊடகங்களில் கார்த்திக் ஆரியனும், ஸ்ரீலீலாவும் காதலிப்பதாக ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து உடனடியாக அதற்கு ஒரு மறுப்பு தெரிவித்திருக்கிறார் ஸ்ரீ லீலா. அவர் கூறுகையில், ‛‛என்னை பற்றி வெளியாகும் காதல் செய்தி முற்றிலும் வதந்தியாகும். சினிமாவை மட்டுமே நான் காதலித்து வருகிறேன். அதோடு நான் படப்பிடிப்புக்கு செல்லும் ஒவ்வொரு நாளும் என்னுடைய தாயார் என்னுடன்தான் இருப்பார். அப்படி இருக்கும்போது நான் எப்படி காதலிக்க முடியும். அதனால் இதுபோன்ற செய்தியை யாரும் நம்பவேண்டாம். மேலும் சினிமாவில் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு மேல் நடிக்க ஆசைப்படுகிறேன். அதனால் இது போன்று வதந்திகளை பரப்பி என் மார்க்கெட்டை சரித்து விடாதீர்கள்'' என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் ஸ்ரீ லீலா.




