என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
என்டிஆருக்கு திருப்புமுனையை தந்த படம் 'பாதாள பைரவி' வெளியாகி தற்போது 74 ஆண்டுகளை கடந்து 75வது ஆண்டு தொடங்கி உள்ளது. தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டு வெளியான இந்தப் படம் 200 நாட்களை கடந்து ஓடியது. அதிக நாட்கள் ஓடி, அதிக வசூலை கொடுத்த முதல் தெலுங்கு படம் என்ற பெயரையும் பெற்றது.
இந்த படத்தில் என்.டி.ராமராவுடன் எஸ்.வி. ரங்கா ராவ், மாலதி, சி.எஸ்.ஆர். ஆஞ்சநேயுலு, ரேலங்கி வெங்கட்ராமையா, பாலகிருஷ்ணா, பத்மநாபம், வல்லம் நரசிம்ம ராவ், நாராயண ராவ், மகாங்காளி வெங்கையா, சுரபி கமலாபாய், ஹேமலத்தம்மா ராவ், டி.ஜி. கமலா தேவி, கிரிஜா உள்பட பலர் நடித்தார்கள். இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தையும் வரவேற்பையும் பெற்ற 100 படங்களில் பாதாள பைரவியும் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க முன்னதாக நாகேஸ்வர ராவ் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தவிர்க்க முடியாத நிலையில் அவரால் நடிக்க முடியாமல் போக, இந்த கேரக்டரில் புதுமுக நாயகனான என்டிஆர் நடித்திருந்தார்.
விஜயா புரொடக்ஷன் தயாரித்த இந்த படம் பிரபல தெலுங்கு எழுத்தாளர் மதிரா சுப்பண்ணா எழுதிய நாட்டுப்புற கதையை தழுவி உருவானது. கேவி ரெட்டி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். முதன் முதலில் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட தென்னிந்திய படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. கடந்த 1952ம் ஆண்டில் மும்பையில் நடைபெற்ற முதல் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது. அதன்பிறகு 2023ம் ஆண்டு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நவீன தொழில்நுட்பத்தில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட பாதாள பைரவி திரையிடப்பட்டது.