பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” |
நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்நிலையில் ரஜினி நடிக்கும் 173வது படத்தை இயக்குவதற்காக பல இயக்குனர்களும் அவரை சந்தித்து கதை சொல்லி வருகிறார்கள். விஜய்யின் ஜனநாயகன் படத்தை இயக்கியுள்ள வினோத் கூட ரஜினியை இயக்க கதை சொல்லி இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது குரங்கு பொம்மை, மகாராஜா படங்களை இயக்கிய நித்திலன் சுவாமிநாதனும் ரஜினியை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறார். அவர் சொன்ன அந்த கதை ரஜினிக்கு பிடித்து விட்டதை அடுத்து ஸ்கிரிப்ட் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். அதனால் ஜெயிலர்- 2 படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் 173 வது படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்குவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதேசமயம் மகாராஜா படத்தை அடுத்து மீண்டும் விஜய் சேதுபதியை இயக்குவதற்காகவும் அவர் ஒரு கதை சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ரஜினி, விஜய் சேதுபதி இருவரில் யாரை அடுத்தபடியாக நித்திலன் சுவாமிநாதன் இயக்கப் போகிறார் என்பது விரைவில் தெரியவரும்.